களைக் கொல்லிகள் என்பவை, களைச் செடிகளை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு வேதியியல் பொருளாகும். இதை
- முளைப்பதற்கு முன்பு,
- களைச்செடி வளர்ந்த பின்பு
என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முளைக்கும் முன்பு செயல்படும் களைக் கொல்லிகள் களை விதை முளைக்கும் போதே, அதன் முளை வேர்கள் வழியே உள்சென்று அவற்றை அழிக்கின்றன. இவ் வகை களைக் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது,
- மண்ணில் போதுமான ஈரப்பதம் அவசியம்.
- இந்தக் களைக் கொல்லிகள் குருணையாக இருந்தால், அதைச் சீராகப் பரப்புவதற்கு மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும். தூவப்பட்ட இடங்களை நீரில் மிதக்காமல் தவிர்க்க வேண்டும்.
களைச் செடிகள் முளைத்து வளர்ந்த பின்பு தெளிக்கப்படும் களைக் கொல்லிகள் இலைகள் மூலம் உறிஞ்சப்பட்டு, மற்ற பாகங்களுக்கு ஊடுருவிச் சென்று, களைகளை கொல்கின்றன. இந்தச் செடிகள் முளைப்பதற்கு முன்பு தெளிப்பதாக இருந்தால், ஹெக்டேருக்கு
- 3.50 லிட்டர் பென்டமெத்தலின் (ஸ்டாம்பு) அல்லது
- அளாக்குளோர் 2.50 லிட்டர் அல்லது
- டையூரான் 1.25 லிட்டர்
உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பருத்தி விதைத்த மூன்றிலிருந்து, ஐந்து நாள்களுக்குள் கைத் தெளிப்பான் மூலம் தெளித்தல் அவசியம்.
தெளித்தப்பின்பு தெளிப்பானை நன்றாகக் கழுவ வேண்டும். தண்ணீரை மட்டும் நிரப்பி ஒரு டேங்க் தரிசாக உள்ள நிலங்களில் அடிப்பதால் தெளிப்பான் உள்பகுதியில் உள்ள களைக் கொல்லி நஞ்சை சுத்தமாக நீக்கலாம். இல்லையெனில், பிறகு மருந்து கலந்து அடிக்கும்போது, களைக் கொல்லியின் மீதமுள்ள நஞ்சினால் பயிர்க் கருகுவதைத் தவிர்க்கலாம்.
களைச் செடி வளர்ந்த பிறகு தெளிப்பான் இருந்தால், பாராக்குவாட் அல்லது டைக்குவாட் என்னும் களைக் கொல்லியைப் பயன்படுத்தி, களைகளை கட்டுப்படுத்தலாம்.
குறிப்பாக, களைக் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது, பருத்தியில் ஊடு பயிராக பயறு வகைகள் இருந்தால், பென்டமெத்தலின் ஸ்டாம்பு உபயோகிப்பதை தவிர்ப்பதோடு, களைகளை அழிக்க களை எடுக்கும் கருவியை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் பி.டி. பருத்தியில் அதிக மகசூல் பெறலாம்.