Sunday, August 22, 2010

பி.டி.​ பருத்தியில் அதிக மகசூல் பெற ஆலோசனை


களைக் கொல்லிகள் என்பவை,​​ களைச் செடிகளை கட்டுப்படுத்துவதற்கு ​ பயன்படுத்தப்படும் ஒரு வேதியியல் பொருளாகும்.​ இதை
  • முளைப்பதற்கு முன்பு,
  • களைச்செடி வளர்ந்த பின்பு
என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.​ முளைக்கும் முன்பு ​ செயல்படும் களைக் கொல்லிகள் களை விதை முளைக்கும் போதே,​​ அதன் முளை ​ வேர்கள் வழியே உள்சென்று அவற்றை அழிக்கின்றன.​ இவ் வகை களைக் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது,
  • மண்ணில் போதுமான ஈரப்பதம் அவசியம்.
  • இந்தக் களைக் கொல்லிகள் குருணையாக இருந்தால்,​​ அதைச் சீராகப் பரப்புவதற்கு மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும்.​ தூவப்பட்ட இடங்களை நீரில் மிதக்காமல் தவிர்க்க வேண்டும்.
களைச் செடிகள் முளைத்து வளர்ந்த பின்பு தெளிக்கப்படும் களைக் கொல்லிகள் ​ இலைகள் மூலம் உறிஞ்சப்பட்டு,​​ மற்ற பாகங்களுக்கு ஊடுருவிச் சென்று,​​ களைகளை ​ கொல்கின்றன.​ இந்தச் செடிகள் முளைப்பதற்கு முன்பு தெளிப்பதாக இருந்தால்,​​ ​ ஹெக்டேருக்கு
  • 3.50 லிட்டர் பென்டமெத்தலின் ​(ஸ்டாம்பு)​ அல்லது
  • அளாக்குளோர் 2.50 லிட்டர் அல்லது
  • டையூரான் 1.25 லிட்டர்
உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை ​ 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பருத்தி விதைத்த மூன்றிலிருந்து,​​ ஐந்து நாள்களுக்குள் ​ கைத் தெளிப்பான் மூலம் தெளித்தல் அவசியம்.
தெளித்தப்பின்பு தெளிப்பானை நன்றாகக் கழுவ வேண்டும்.​ தண்ணீரை மட்டும் ​ நிரப்பி ஒரு டேங்க் தரிசாக உள்ள நிலங்களில் அடிப்பதால் தெளிப்பான் உள்பகுதியில் உள்ள களைக் கொல்லி நஞ்சை சுத்தமாக நீக்கலாம்.​ இல்லையெனில்,​​ பிறகு மருந்து கலந்து அடிக்கும்போது,​​ களைக் கொல்லியின் மீதமுள்ள நஞ்சினால் பயிர்க் கருகுவதைத் தவிர்க்கலாம்.
களைச் செடி வளர்ந்த பிறகு தெளிப்பான் இருந்தால்,​​ பாராக்குவாட் அல்லது ​ டைக்குவாட் என்னும் களைக் கொல்லியைப் பயன்படுத்தி,​​ களைகளை ​ கட்டுப்படுத்தலாம்.​ ​
குறிப்பாக,​​ களைக் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது,​​ பருத்தியில் ஊடு பயிராக பயறு ​ வகைகள் இருந்தால்,​​ பென்டமெத்தலின் ஸ்டாம்பு உபயோகிப்பதை ​ தவிர்ப்பதோடு,​​ களைகளை அழிக்க களை எடுக்கும் கருவியை பயன்படுத்த வேண்டும்.​ ​ இவ்வாறு செய்தால் பி.டி.​ பருத்தியில் அதிக மகசூல் பெறலாம்.