ஒரு செண்ட் நிலத்தில் நடவு செய்வதற்குத் தேவையான நாற்றை உற்பத்தி செய்ய 9 அடி நீளம் 3 அடி அகலம் உள்ள இடமும் 150 கிராம் விதை நெல்லும் போதும். நிலத்தில் தண்ணீர் விட்டு மண்ணை சேறாக மாற்றிக் கொள்ள வேண்டும். 120 மில்லி தண்ணீர் 30 மில்லி மாட்டுச் சிறுநீர் இரண்டும் கலந்த கரைசலில் 150 கிராம் விதை நெல்லை ஊறவைத்து எடுத்து மூன்றாம் கொம்பு வைக்கவேண்டும். முளை விட்டுள்ள இந்த விதைகளைக் கொண்டு நாற்றங்காலில் தெளிக்க வேண்டும் பிறகு ரகத்தின் வயதைப் பொறுத்து 14 முதல் 18 நாள் வயதுடைய நாற்றைப் பறித்து நடவு செய்ய வேண்டும்.
நடவு செய்வதற்குத் தேவையான நிலம் தயாரிப்பு, இடுபொருள் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களைத் தனித்தனியாக ஒவ்வொரு செண்ட் நிலத்துக்காகவும் கணக்கில் எடுத்துக் கொள்வது சற்று சிரமமானதாக இருக்கும் என்பதால் இங்கே ஒரு ஏக்கர் நிலத்தைக் கணக்கில் கொண்டே அளவுகள் அனைத்தும் தரப்படுகின்றன.
ஒரு ஏக்கர் நிலத்துக்கு 5 டன் தொழுஉரத்தைக் கொட்டி களைத்துவிட்டு பின்னர் களைகள் இல்லாமல் நன்றாக உழவு செய்து சேறாக மாற்றிக்கொள்ளவேண்டும். நிலத்தில் இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு செண்ட் அளவிற்குப் பிரித்து, சிறிய வரப்பு அமைத்துக் கொண்டு, மார்க்கர் குறியீட்டுக் கருவியை உருட்டி குறியிடப்பட்ட இடத்தில் குத்துக்கு ஒரு நாற்று வீதம் (ஒற்றை நாற்று நடவு முறை) நடவு செய்ய வேண்டும்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு 24 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 10 கிலோ கடலைப் புண்ணாக்கு, 10 கிலோ ஆமணக்குப் புண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து அடியுரமாக இடவேண்டும். அதிக உயரம் வளரும் ரகமாக இருப்பின் கடலைப் புண்ணாக்கைப் பாதியாகக் குறைத்துக் கொள்ளவும்
பூச்சியை விரட்டும் புண்ணாக்குக் கரைசல்
ரோட்டரி வீடர் கருவி கொண்டு 9, 18 மற்றும் 24ஆம் நாளில் களை எடுக்கவேண்டும். 14 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை தண்ணீரோடு கலந்து விடவேண்டும். 35ஆம் நாளில் தேவைப்பட்டால் ஏற்கனவே கொடுத்த அளவில் புண்ணாக்குகளைக் கொடுக்கலாம். கதிர் வருவதற்கு முன்பு 6 கிலோ ஆமணக்குப் புண்ணாக்கு 6 கிலோ புங்கம் புண்ணாக்கு இரண்டையும் 12 கிலோ மணலுடன் கலந்து தூவ வேண்டும். பூச்சித் தாக்குதலைக்குறைப்பதற்கு 14 நாட்களுக்கு ஒரு தடவை வேப்பம் புண்ணாக்கு கரைசலைத் தெளிக்க வேண்டும். 100லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கை 24 மணிநேரம் ஊறவைத்தால் புண்ணாக்கு கரைசல் தயார். ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் அளவுள்ள ஒரு டேங்கில் எட்டு லிட்டர் வேப்பம் புண்ணாக்கு கரைசல் மற்றும் 2 லிட்ட்ர் மாட்டுச் சிறுநீர் இரண்டையும் ஊற்றிக் கலந்து தெளிக்க வேண்டும்.
ரோட்டரி வீடர் கருவி கொண்டு 9, 18 மற்றும் 24ஆம் நாளில் களை எடுக்கவேண்டும். 14 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை தண்ணீரோடு கலந்து விடவேண்டும். 35ஆம் நாளில் தேவைப்பட்டால் ஏற்கனவே கொடுத்த அளவில் புண்ணாக்குகளைக் கொடுக்கலாம். கதிர் வருவதற்கு முன்பு 6 கிலோ ஆமணக்குப் புண்ணாக்கு 6 கிலோ புங்கம் புண்ணாக்கு இரண்டையும் 12 கிலோ மணலுடன் கலந்து தூவ வேண்டும். பூச்சித் தாக்குதலைக்குறைப்பதற்கு 14 நாட்களுக்கு ஒரு தடவை வேப்பம் புண்ணாக்கு கரைசலைத் தெளிக்க வேண்டும். 100லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கை 24 மணிநேரம் ஊறவைத்தால் புண்ணாக்கு கரைசல் தயார். ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் அளவுள்ள ஒரு டேங்கில் எட்டு லிட்டர் வேப்பம் புண்ணாக்கு கரைசல் மற்றும் 2 லிட்ட்ர் மாட்டுச் சிறுநீர் இரண்டையும் ஊற்றிக் கலந்து தெளிக்க வேண்டும்.
இந்த முறையில் சாகுபடி செய்யும்போது தூருக்கு 85 சிம்புகளும் சிம்புக்கு 250 முதல் 400 நெல்மணிகளும் இருக்கும். கதிர் பழுத்த பிறகு கடைசி இரண்டு வாரம் தண்ணீர் இல்லாமல் நிலத்தைக் காயப் போடவேண்டும். உப்புத் தன்மையுள்ள நிலததில் ஒற்றை நாற்று நடவு முறை மேற்கொண்டால் 14 நாட்கள் முன்னதாகவே அறுவடை செய்யலாம்.
அறுவடை செய்த நெல் ரகங்களைத் தனியாகக் காயவைக்க வேண்டும். வேப்பம்புண்ணாக்குக் கரைசலில் முக்கி எடுத்து உலர வைத்த சணல் சாக்கில் இந்த நெல்லைச் சேமித்து வைக்கவேண்டும்.
இதன்படி செய்தால் ஒரு செண்ட் நிலத்தில் 27 முதல் 32 கிலோ வரைக்கும் நெல் மகசூலா கிடைக்கும். ஒரு ஏக்கருக்குக் கணக்குப் போட்டா 60 கிலோ மூட்டையில் குறைந்த பட்சம் 45 மூட்டை வரைக்கும் கிடைக்கும்