Tuesday, September 27, 2011

உளுந்துக்கு உதவும் டி.ஏ.பி. கரைசல்


உளுந்துப் பயிரில் அதிக மகசூல் பெற டி.ஏ.பி. கரைசல் தெளிக்கலாம்.
பாளையங்கோட்டை வட்டாரத்தில் புதுக்குளம், திடியூர், கொங்கந்தான்பாறை, சிவந்திப்பட்டி, முத்தூர் கிராமங்களில் உளுந்துப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு தற்போது 30-40 நாள்கள் பயிராக உள்ளது. டி.ஏ.பி. கரைசல் தெளிக்க இதுவே ஏற்ற தருணம்.
உளுந்துப் பயிரை நன்செய் தரிசில் சாகுபடி செய்வதால் அடி உரமிட வாய்ப்பில்லை. அதிக மகசூல் பெற இலைவழி உரம் அளித்தல் மிகவும் அவசியம்.
செடிகள் பூக்க ஆரம்பிக்கும்போது 2 சதவிகிதம் டி.ஏ.பி. கரைசல் தயார் செய்ய ஒரு ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.
பின்னர் மறுநாள் நீரை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரில் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து 200 லிட்டர் கலவை தயார் செய்ய வேண்டும். இந்த கலவையை மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் கொண்டு பயிரில் தெளிக்க வேண்டும்.
டி.ஏ.பி. 2 சதவிகித கரைசல் தெளிப்பின்போது நிலத்தில் போதுமான ஈரம் இருக்க வேண்டும். மீண்டும் கரைசலை 15 நாள்கள் கழித்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு தெளித்தால் பயறு வகைப் பயிர்களில் உண்டாகும் பூக்கள் அனைத்தும் காய்களாக உருவாகி செடிகளில் காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்