Monday, December 26, 2011

தரமான நெல் விதைகளை விவசாயிகளே உற்பத்தி செய்தால் கூடுதல் லாபம்


நமது பாரம்பரிய விதை மேலாண்மை என்பது கிட்டத்தட்ட காணாமல் போய்விடும் நிலையில் உள்ளது.  அத்தகு நிலையிலும் விவசாயிகள் விதை உற்பத்தி செய்தல் வேண்டும் என்று அதிகாரிகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
விவசாயிகள் ஆண்டுதோறும் நெல் விதைக்காக வேளாண் துறை அல்லது தனியார் நிறுவனங்களை எதிர்ப்பார்ப்பதை விட, வேளாண் துறையில் ஒரு முறை மட்டும் ஆதார விதைகளைப் பெற்று, தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு தாங்களே தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து கொள்ளலாம்.
மேலும், மண் பரிசோதனை செய்து, உயர் தர உரங்களைப் பயன்படுத்தி, புதிய தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயப் பணிகளை மேற்கொண்டால், நிச்சயமாக கூடுதல் லாபம் கிடைக்கும்.
இதேபோல, உளுந்து, பயறு வகை விதை உற்பத்திக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றில் வழங்கப்படும் மானியத்தின் மூலமும் விவசாயிகள் நல்ல பயன் பெற முடியும்.
எனவே, இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி விவசாயிகள் பயறு வகைப் பயிர்களையும் சாகுபடி செய்ய முன் வர வேண்டும்.