Wednesday, September 19, 2012

பருத்தி மற்றும் மக்காசோள சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற


பருத்தி மற்றும் மக்காசோள சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில், 45,000 ஹெக்டரில் மக்காசோளமும், 26,000 ஹெக்டரில் பருத்தியும் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், மாநில சராசரி விளைச்சலை விட குறைவான மகசூல் பெறுகின்றனர். எனவே, ஒரு ஏக்கர் பரப்பளவில் அதிக பயிர் எண்ணிக்கை பராமரிப்பதன் மூலம் கூடுதல் மகசூலும், அதிக வருவாயும் எடுக்கமுடியும்.
பருத்தியில், செடிக்கு செடி 2 அடி இடைவெளியும், அடுத்த வரிசை 4 அடியும், அடுத்த வரிசை 2 அடியும் விட்டு நடவு செய்ய வேண்டும். ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்து, அதிக பயிர் எண்ணிக்கையை பராமரித்து கூடுதல் வருவாய் பெறலாம்.
மக்காசோள சாகுபடியில் வரிசைக்கு வரிசை 2 அடியும், செடிக்கு செடி ஒன்றரை அடி விட்டு ஒரு குழியில் இரண்டு விதை நடவு செய்தால், அதிக பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம்.
இதன்மூலம், இரட்டிப்பு வருவாய் பெறலாம். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி மற்றும் மக்காசோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த புதிய தொழில் நுட்பத்தை கடைத்து அதிக மகசூல் பெறலாம்.