விவசாயிகள்
மற்றும் காட்டுப்பகுதிகள் என்றில்லாமல் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் வீடுகளில் முருங்கை மரங்களை வளர்த்தி
வருகின்றனர். முருங்கை காய், முருங்கை கீரை போன்ற சமையலுக்காக இதிலிருந்து பொருட்கள்
பெறப்படுகின்றன. பொதுவாக வருடத்தில் குறிப்பிட்ட
சில காலங்களில் முருங்கை மரங்களில் ஒரு வித பூச்சிகளில் தாக்குதல் ஏற்படுகிறது. சில
வகைப் பூச்சிகள் மருங்கை மரத்தில் ஆண்டு முழுவதும் காணப்படுகிறது.
முருங்கை மரங்களில் காணப்படும் பூச்சிகளில் நூர்டோ
மொரிங்கோ, நூர்மா பிளைட்டியாவிஸ், யூட்டிரோட் டெல்லிபெரா, ஜிட்டேர்னா டைஸ்டிக்மா உள்ளிட்ட
பூச்சி இன்ங்கள் முக்கியமானவையாக உள்ளது. நூர்டா மெரிங்கோ பூச்சி மொக்குப்புழு என்று
அழைக்கப்படுகிறது. இவை முட்டை பருவத்தில் வெண்ணிற
நீள்வட்ட வடிவில் காணப்படும், இந்தப்பூச்சிகள் முருங்கை பயிரின் பூ மொக்குகளை து ளையிட்டு
சாப்பிடும். தாக்கப்பட்ட பூ மற்றும் மொக்குகள் உதிர்ந்து காணப்படும். உதிர்ந்த பூ மற்றும்
மொக்குகளை பொறுக்கி அழித்தும், ஹெக்டேருக்கு 1 லிட்டர் மாலத்தியான்
தெளித்தும் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
நூர்டா பிளைட்டியாவிஸ் புழு இலைப்புழு என்று அழைக்கப்படும்.
இவை முட்டைப்பருவத்தில் வெண்ணிற நீள்வட்டத்தில்
குவியல்கள் இலைமேல் காணப்படும். இதன் புழுக்கள் முன்மார்பு உறை இல்லாமல் இருக்கும்.
பூச்சி மொக்குப்புழுவை போலவே இருக்கும். ஆனால் சற்று பெரியதாக காணப்படும்.
இந்தப் புழுக்கள் இலைப்பச்சையத்தை சுரண்டி தின்பதால்
இலைகள் சல்லடை போல் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த மரத்தை சுற்றி உழவு செய்து
மண்ணில் புதைந்துள்ள கூட்டுப்புழுக்களை வெளிக்கொணர்ந்து அழைக்கலாம்.
ஜிட்டேர்னா
டைஸ்டிக்மா எனப்படும் காய்ப்புழு முட்டை
பருவத்தில் இளம் காய்களில் காணப்படும்.
புழு வெண்ணிற கால்களற்ற ஈக்களாக இருக்கும். இதன் ஈ மஞ்சள் நிறத்திலும், கண்கள் மட்டும்
செந்நிறத்திலும் இருக்கும். இவை தாக்கிய பயிர்களின் காய்கள் காய்த்தும், பிளந்தும்
காணப்படும். காய்களில் இருந்து தேன் போன்ற திரவம் வடிவதே சேத்த்தின் அறிகுறி. இந்தப்
பூச்சியைக் கட்டுப்படுத்த தாக்கப்பட்ட மற்றும் காய்ந்து விழுந்த காய்காளை சேகரித்து
அழிக்கலாம்.
கூட்டுப்புழுக்களை கொன்று, தாய் ஈ உருவாவதை தவிர்க்கலாம்.
தகுந்த மருந்துகளை உபயோகப்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்
Thanks
to dinakaran
