கடந்த 2011-ம் ஆண்டு உலகளவில்
5.15 மில்லியன் எக்டர் பரப்பிலிருந்து 106.54 மில்லியன் டன் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது.
இதன் சராசரி உற்பத்தித்திறன் ஒரு எக்டேருக்கு 20.7 டன்களாகும். கடந்த உற்பத்தியில்
இந்தியா 27.8 சதவீதம் பங்களித்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் வாழையின் பரப்பு
மற்றும் உற்பத்தி முறை கணிசமாக அதிகரித்துள்ளது. உற்பத்தி 188.87 லட்சம் டன்னிலிருந்து
296.67 லட்சம் டன்களாகவும் மற்றும் உற்பத்தித்திறன்
ஒரு எக்டருக்கு 33.1 டன்னிலிருந்து 36.3 டன்களாகவும் அதிகரித்துள்ளது.
நாட்டில் தமிழகம் வாழை உற்பத்தியில் முன்னனியில் உள்ளது. கடந்த 2011-12 ல் 82.53 லட்சம்
டன் வாழை உற்பத்தியில் தமிழகம் (26.47 சதவீதம்), மகாராஷ்டிரா (52.5 டன்/எக்டர்) உள்ளது.
தமிழகத்தில் பயிரிடப்பப்படும் முக்கிய வாழை ரகங்களில் நேந்திரம் முக்கியமானதாகும்.
கோவை, ஈரோடு, திருச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேந்திரம் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
நேந்திரன் முக்கியமாக சிப்ஸ் தயாரிப்பதற்கு பயன்படுகிறது. நேந்திரன் ஒரு தாருக்கு சராசரி 8 முதல் 12 கிலோ
வரை எடை கூடியுள்ளது. ஏப்ரல்-மே மற்றும் அக்டோபர்
– நவம்பர் ஆகிய மாதங்களில் நேந்திரன் நடவு செய்யப்படுகிறது. இந்த ரகம் காற்று சேதத்தை
தாங்கி வளர்வதால் உயர் அடர்த்தி நடவு முறை பின்பற்றப்படுகிறது.
அதிகமான வரத்துகள் ஜனவரி-பிப்ரவரியிலும் மற்றும் குறைந்த வரத்துகள்
ஜூலை-ஆகஸ்ட்டிலும் வருகின்றன. தற்போது சந்தைவிலை கிலோ ஒன்றுக்கு ரூ.32 ஆகும். இவ்விலை
தரம் மற்றும் இதர பண்புகளை பொறுத்து மாறுபடும். வரும் மாதங்களில் அறுவடை விலைகளை பற்றி
விவசாயிகள் விழிப்புடன் செயல்பட்ட வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் உள்நாட்டு
மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையமானது. கோவையில் இயங்கிவரும் உழவர் சந்தையில் கடந்த
10 வருடங்களாக நிலவிய நேந்திரன் விலைகளை ஆராய்ந்தது.
கோவை உழவர் சந்தையில் 2013 ஆகஸ்டு மாதத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ
31 முதல் 33 வரை கிடைக்கும். 2013 செப்டம்பரில் கிலோ ஒன்றுக்கு ரூ.33 முதல் 35 வயது
வரை இருக்கும். விவசாயிகள் முகவர் மூலம் விற்கும்போது விலை முன்னறிவிப்புகளை விட கிலோ
ஒன்றுக்கு குறைவாகவே கிடைக்கும். இவ்வாறு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
