Monday, September 6, 2010

தென்னையில் கருந்தலைப் புழுவை கட்டுப்படுத்த வேண்டுமா?


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிசானப்பள்ளி, கொல்லப்பள்ளி, தொரப்பள்ளி, ஒன்னல்வாடி, காரப்பள்ளி, வேப்பன்ப்பள்ளி, ஊத்தங்கரை, வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் தென்னை மரங்களில் கருந்தலைப் பழுக்களின் தாக்குதல் தென்படுகிறது.
தாக்குதலின் அறிகுறிகள்:
புழுத் தாக்கப்பட்ட தென்னை மட்டைகளின் அடிபாகத்தில் அறிக்கப்பட்டு சக்கைகளிலான நீளமான கூண்டுகள் காணப்படும். இதில் புழுக்கள் தென்படும். இவை மட்டைகளில் உள்ள பச்சையத்தை சுரண்டி சாப்பிடும். இதனால் மட்டைகள் காய்ந்து விடும்.
தடுக்கும் முறை:
கருந்தலை புழுவினால் பாதிக்கப்பட்ட ஒலைகள் மற்றும் மட்டைகளை தனியாக எடுத்து எரித்துவிட வேண்டும்.
இளம் மரங்களில், மைகுளோராபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. வீதம் கலந்து தாக்குதல் அதிகம் உள்ள மரங்களின் அடிபாகத்தில் தெளிக்க வேண்டும்.
காய்ப்பு வந்த மரங்களில், மரத்தின் அடிபாகத்தில் இருந்து 1.5 மீட்டர் உயரத்தில் மரத்தில் சாய்வாக துளையிட்டு அதனுள் மோனாகுரோடம்பாஸ் மருந்தை 5 மி.லி. ஊற்றி தாமிர கரைசல் கலந்த களி மண்ணால் மூடிவிட வேண்டும்.
வேர்மூலம் கட்டுப்படுத்தவதாக இருந்தால், வளர்ந்த வேரை சாய்வாக வெட்டி அதில் மோனோகுரோடபாஸ் கலவையை பாலிதீன் பை மூலம் கட்டி விட வேண்டும்.