Monday, September 6, 2010

அதிக மகசூல் தரும் நுண்ணூட்டக் கலவை


நுண்ணூட்டச் சத்து அளிப்பதன் மூலம் தென்னையை அதிக மகசூல் பெறும் பயிராக மாற்ற முடியும் என்று
தென்னையில் நல்ல வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் என்பது மண்வளத்தை பொருத்தே அமைகிறது. நீண்டகால பயிரான தென்னை பல ஆண்டுகளுக்கு நல்ல பலன் தரக்கூடியது. இதனால் இதற்கு தொடர்ந்து நுண்ணூட்டச் சத்து தேவை. பொதுவாக விவசாயிகள், தழை, மணி, சாம்பல் சத்துகளையே பயிருக்கு அளிக்கின்றனர்.
நுண்ணூட்டச் சத்துக்களான துத்தநாகம், காப்பர், இரும்பு, மாங்கனீசம், போரான் போன்ற சத்துகளை நமது விவசாயிகள் மண்ணில் இடுவதில்லை. இதனால் நுண்ணூட்ட சத்துக்களின் பற்றாக்குறை ஏற்பட்டு தென்னையின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் மகசூல் பாதிப்பை தென்னை சந்திக்கிறது. தென்னை நன்றாக வளர்ச்சி பெற்று, தொடர்ந்து மகசூல் தருவதற்கு நுண்ணூட்டச் சத்துகளை விவசாயிகள் அளிப்பது அவசியம்.
6 மாதத்திற்கு ஒரு முறை 300 முதல் 500 கிராம் வரை ஒரு மாத காலத்திற்கு நுண்ணூட்டக் கலவை இடுவது நல்லது.
மரத்தில் இருந்து 3 அடி தள்ளி 12 அடி ஆழத்தில் சுற்றிலும் நுண்ணூட்டக் கலவை இட வேண்டும். 5 வயதிற்குட்பட்ட தென்னை மரங்களுக்கு இதில் பாதி அளவு இட்டாலே போதும்.
நுண்ணூட்டச் சத்துகளை சூப்பர் பாஸ்பேட் உரத்துடன் கலந்து இடக்கூடாது. இது மிகவும் முக்கியம்.நுண்ணூட்ட கலவை தென்னை வளர்ச்சியை துரிதப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மண்ணில் உள்ள மற்ற சத்துகளை எளிதில் வேருக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது.
நுண்ணூட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதினால் மரம் சீரான வளர்ச்சி அடைவதுடன், அதிக மகசூல் மற்றும் எண்ணெய் சத்து கிடைக்க வழிவகை செய்கிறது.
இரும்பு மற்றும் போரான் ஆகியன குரும்பை உதிர்வது மற்றும் ஒல்லிகாய்கள் காய்ப்பதைத் தடுக்கின்றன. நுண்ணூட்டச் சத்துக் காரணமாக செழிப்பாக வளரும்
தென்னை மரங்களில் இரியோபிட் சிலந்தி தாக்குதல் குறைகிறது.