Thursday, February 24, 2011

மாசற்ற நிலத்தை உருவாக்கும் மண்புழு உரம்


இரு வருடங்களுக்கு முன் புதுக்கோட்டை வம்பன் பண்ணையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியி்ல் நிகழ்த்தப்பட்ட உரை.
மண்புழுக்களில் குறைந்த காலத்தில் அதிக உரத்தை அளிப்பவை ஆப்பிரிக்கன் மற்றும் சிவப்பு வகைகளாகும். மண்புழு உரம் தயாரிக்க நிழல் மற்றும் குளிர்ச்சியான, உபயோகப்படுத்தாத மாட்டுத்தொழுவம், கோழிப்பண்ணை ஆகியவற்றைப் பன்படுத்தலாம்.
வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பதற்கு கூரையாக தென்னங்கீற்றைப் பயன்படுத்தலாம். 2.5 அடி உயரம் மற்றும் 3 அடி அகலம் கொண்ட சிமென்ட் தொட்டிகள் கட்ட வேண்டும். தேவையைப் பொருத்து நீளம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.
மண்புழு மண்ணுக்குள் செல்வதைத் தடுக்க உரப்படுக்கை இடம் கடினமானதாக அமைக்க வேண்டும். ஹாலோ பிளாக்ஸ் அல்லது செங்கற்களைப் பயன்படுத்தி கட்டமைப்புகளை உருவாக்கலாம்.
கால்நடைக்கழிவுகள், பண்ணைக்கழிவுகள், பயிர்க்கழிவுகள், காய்கறிக் கழிவுகள், மலர் அங்காடி கழிவுகள், வேளாண்தொழில்சாலைக் கழிவுகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
மட்கக்கூடிய கழிவுகளை சிறுசிறு துண்டுகளாக்கி அதை மூட்டம்போட்டு அதன் மீது சாணக்கரைசலை தெளித்து மட்கவிட வேண்டும். 20 நாட்கள் மட்கிய கழிவுகள் மண்புழு சாப்பிட ஏதுவாக இருக்கும்.
உரத்தொட்டிகளில் சாணம் மற்றும் கழிவுகளை 5 படுக்கைகளாக இட வேண்டும். முதல் அடுக்கு சாணம் அதன் மேல் வேளாண் கழிவுகள், அடுத்த சாணம் பிறகு கழிவுகள் என 5 அடுக்குகளாக இட வேண்டும்.
வாரம் ஒருமுறை புரட்டிப் போட வேண்டும் இவ்வாறு செய்வது படுக்கையிலுள்ள வெப்பத்தை தொட்டிக்கு 1.5 டன் கழிவுகள் மற்றும் சாணம் இட்டு தயார் செய்யும்பொழுது ஒரு டன் மண்புழு உரம் கிடைக்கும். ஒருநாள் விட்டு ஒரு நாள் மண்புழு உரத்தை அறுவடை செய்யலாம்.
இவ்வாறு சேகரித்த மண்புழு உரத்தை அதிக வெப்பமில்லாத காற்றோட்டம் உள்ள இடத்தில் சேமிக்க வேண்டும்.
ஒரு ஹெக்டேரில் இடப்படும் 5 டன் மண்புழு உரத்தில் 75 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்தும் அடங்கியுள்ளன.
இது சுமார் 160 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 60 கிலோ ம்யூரியேட்ஆப் பொட்டாஷ் உரத்துக்கு இணையானது. மேலும் இதுபோன்று ஆண்டுக்குகு ஒருமுறை இடுவதால் அரைச்சதம் அங்ககப் பொருள் அதிகரிக்கும்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் ரசாயண உரங்களால் மாசுபட்ட வேளாண் நிலங்களை சீர்சிருத்த இயற்கை வேளாண்மைக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே, இயற்கை வேளாண்மையின் முக்கிய இடுபொருளான மண்புழு உரத்தின்தேவை தொடர்ந்து அதிகரித்துவருவதால் மகளிர் சுய உதவிகுழுக்கள், உழவர் மன்றங்கள் மண்புழு உர உற்பத்தியில் ஈடுபடுவதால் நல்ல லாபம் ஈட்டலாம்