Wednesday, November 21, 2012

ஐஸ்பாக்ஸ் தர்பூசணி


நாம் வழக்கமாக சாப்பிடும் தர்பூசனி 8 முதல் 12 கிலோ வரை எடை இருக்கும். அதன் சாகுபடி காலம் 90 நாட்கள். அதில் இனிப்புச் சுவை கொஞ்சம் குறைவு. வருடத்தில் நவம்பர் மாதத்தில் விதைப்பு ஆரம்பித்து, ஜனவரியில் சந்தைக்கு வரும். பழங்கள் ஜூன், ஜூலை வரை இருக்கும். ஐஸ்பாக்ஸ் ரகங்கள் வருடம் முழுவதும் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு பழத்தின் எடை ரகத்தைப் பொறுத்து 2 கிலோ முதல் 5 கிலோ வரை இருக்கும். அபரிமிதமான இனிப்புச் சுவையுடன் இருக்கும். 

இந்தப்பழம் வழக்கம்போல் தமிழகத்தைவிட கேரளாவில்தான் அதிகம் விற்பனை ஆகிறது. இதன் சாகுபடி காலம் 60 நாட்கள். பெரிய தர்பூசனி ரகங்களைவிட இவற்றிற்கு கவனிப்பும் பராமரிப்பும் அதிகம் தேவை. தாளவாடிப் பகுதியில் ஐஸ்பாக்ஸ் அதிகமானபோது துணிந்து சாகுபடி செய்ய ஆரம்பித்த சிலரில் மோகனும் ஒருவர். வருடத்திற்கு 2 முறைதான் பயிர் செய்கிறார். இதன் சாகுபடியில் விதையை நேரடியாக வயலில் விதைப்பதில்லை. நர்சரிகளில் 15-17 நாட்கள் நாற்றாக வளர்த்து, பிறகு நடவு செய்கிறார். தாளவாடி முழுக்கவே சொட்டுநீர்ப்பாசனம் மூலமாகத்தான் ஐஸ்பாக்ஸ் சாகுபடி நடைபெறுகிறது. மல்ச்சிங் ஷீட் போட்டுத்தான் தர்பூசனி சாகுபடி செய்கிறார். மகசூல் ஏக்கருக்கு சராசரியாக 20 டன். விலை ரூ.10. மேலும் விபரங்களுக்கு: மோகன், த/பெ.கிருஷ்ணசாமி, கவுரி குட்டைத் தோட்டம், தலமலை ரோடு, தாளவாடி, சக்தி தாலுகா, ஈரோடு. 94872 42591.


மரக்கன்றுகள் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்:

     குமார் ஹைடெக் நர்சரி, (தமிழக அரசு உரிமம் பெற்றது), 204, மேகிணறு பிரிவு, என்.சி. பாளையம் அஞ்சல், மேட்டுப் பாளையம் ரோடு, அன்னூர்-641 653. கோவை மாவட்டம். 94877 05596, 93449 25596. மலைவேம்பு ரூ.6.00; தேக்கு ரூ.5.00; குமிழ் ரூ.5.00; செஞ்சந்தனம் ரூ.10.00; சந்தனம் ரூ.15.00; வேங்கை ரூ.10.00; சவுக்கு ரூ.3.00; தைலம் ரூ.3.00; சில்வர் ஓக் ரூ.6.00; மூங்கில் ரூ.15.00; வாகை ரூ.6.00; பெருமரம் ரூ.10.00 மற்றும் ஈடா ரூ.10.00 ஆகிய நாற்றுக்கள் கிடைக்கும். பாலாஜி ஆர்டிக்கல்சர்ஸ் நர்சிரி கார்டன், எம்.எம்.நகர், காஞ்சிபுரம். 97910 77543, 90030 50778. மரக்கன்றுகள் வழங்குவதோடு மட்டுமல்லாது குழி எடுத்தல், கன்று நடுதல், டிரிப் இர்ரிகேஷன் போன்ற பணிகளையும் ஆட்களை கொண்டு சிறப்பாக செய்து தருகிறார்கள். பார்ம் ஹவுஸ் அமைப்பது, லேண்ட் ஸ்கேப்பிங் செய்வது போன்ற சேவைகளையும் வழங்கிவருகிறார்கள்.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்