வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் வெண்டை சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிறைந்த லாபம் பெறலாம்.
இது குறித்து, வாசுதேவநல்லூர் வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் முஹைதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நிலம் தயாரித்தல்: 3 முதல் 4 முறை நிலத்தை உழவேண்டும். கடைசி உழவுக்கு முன் 25 மெட்ரிக் டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ. இடைவெளிவிட்டு வரிப் பாத்திகள் அமைக்க வேண்டும்.
உரமிடுதல்: அடியுரமாக, ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோ மணிச்சத்து மற்றும் 50 கிலோ சாம்பல் சத்து உரங்கள் இட்டு நன்கு கலந்துவிட வேண்டும்.
மேலுரமாக, விதைத்த 30-ஆம் நாள் 50 கிலோ தழைச்சத்து, 50 கிலோ சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும். விதைத்த 45-ஆம் நாள் 50 கிலோ தழைச்சத்து உரங்களை இடவேண்டும்.
இலை வழி உரம்: விதைத்த 40 மற்றும் 60-ஆம் நாள் நுண்ணூட்டச் சத்து கலவையை 1 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
அறுவடை மற்றும் மகசூல்: விதைத்த 45-ஆம் நாள் முதல் காய்களை அறுவடை செய்யலாம். பயிரின் 90-100 நாள்கள் வரை இருக்கும் காய்களை நார் பிடிக்கும் முன் ஒருநாள் இடைவெளியில் அறுவடை செய்ய வேண்டும்.
நன்கு பராமரிக்கப்பட்ட வயலில் ஒரு ஹெக்டேருக்கு 15-18 டன் வரை மகசூல் கிடைக்கும்.
thanks to dinamani
